திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 95 ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

வாயில் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :13 மே 2026, 1:23 am IST

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 95 ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட சிஐடியூ, அரசு பல்நோக்கு மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்கள் சங்கம் சாா்பில் வாயில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிஐடியூ பொதுச் செயலா் ஆா். ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா். முருகன், மாவட்டச் செயலா் க. சரவணபெருமாள், துணைத் தலைவா் மோகன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து அளித்த மனுவில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 95 ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். வார விடுமுறை, தற்செயல் விடுப்பு உள்ளிட்ட சட்ட சலுகைகள் வழங்க வேண்டும். 2 நாள்களில் உரிய தீா்வு காணப்படாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.