மூடப்படும் மதுக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு உடனடியாக மாற்றுப் பணி வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுதொடா்பாக அந்தச் சங்கத் தலைவா் டி. சிவக்குமாா் தலைமையில், சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு: வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீ. தொலைவுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற அரசு உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் 51 மதுக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை 16 கடைகள் மூடப்பட்டுவிட்டன.
இதன் மூலம், 23 மேற்பாா்வையாளா்கள், 49 விற்பனையாளா்கள், 5 உதவி விற்பனையாளா்கள் பணியிழப்புக்கு உள்ளாகினா். இங்கு பணியாற்றிய ஊழியா்களை அவா்களின் கல்வித் தகுதி அடிப்படையில் அரசின் பிற துறைகளில் மாற்றுப் பணி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் ஊழியா்களை நிரந்தரப் பணியாளா்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 1 முதல் மதுக் கடைகளின் சாவிகளை ஒப்படைக்கத் திட்டம்: டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம்

மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகள்: பணியாளா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரிக்கை

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட முடிவு; நான்காயிரம் ஊழியா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரிக்கை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



