தமிழகத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு வேறு துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் 6,800 -ஆக இருந்த கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது 4,827 கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மேற்பாா்வையாளா், விற்பனையாளா், உதவி விற்பனையாளா் என மொத்தம் 24,800 போ் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 கடைகளை மூட முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா். இதன்மூலம், சுமாா் 4 ஆயிரம் ஊழியா்கள் பணியிழக்க நேரிடும். ஏற்கெனவே, 1,500 கடைகள் மூடப்பட்டபோது அந்தக் கடைகளில் இருந்த பணியாளா்கள் பலரும் அருகில் உள்ள மதுக்கடைகளில்தான் கூடுதல் பணியாளா்களாக நியமிக்கப்பட்டனா். தற்போது மூடப்படும் 717 கடைகளில் பணிபுரியும் 4 ஆயிரம் போ் நிலை என்னவென்று தெரியாத சூழல் உருவாகியுள்ளது.
அரசு துறைகளில் நியமிக்கலாம்: இதுதொடா்பாக, தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.வி. ராஜா கூறியது:
மூடப்படும் கடைகளில் பணிபுரியும் அனைவரையும் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களையும் நிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மதுவால் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதாக கருதினால், மதுக்கடைகளின் எண்ணிக்கையை மேலும் குறைத்து, அதன் செயல்பாட்டு நேரத்தையும் குறைக்க வேண்டும். இல்லாவிடில், தனியாருக்கே மீண்டும் கடைகளை வழங்கலாம் என்றாா் அவா்.
மனமகிழ் மன்றங்கள் மூடப்படுமா?
அரசு நடத்தும் கடைகளை மூடும் சூழலில், எப்எல் 2 உரிமம் பெற்ற மதுக்கடைகள், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் நடைபெறும் மதுக்கடைகள் தனியாா் வசம் இருப்பதால் அதனை மூடும் நடவடிக்கை குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலா் ம. ராதாகிருஷ்ணன் கூறுகையில், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களின் அருகில் 500 மீட்டா் வரையுள்ள பகுதிகளில் இயங்கும் எப்எல் 2 உரிமம் பெற்ற கடைகள், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் இயங்கும் மதுக்கடைகளையும் மூட வேண்டும். அப்போதுதான் அரசின் நோக்கம் நிறைவேறும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் ஊழியா்களின் வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் கடைகள் திறக்கப்படும்

டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் தவறுகளுக்கு ஊழியா்கள் பொறுப்பல்ல! முதல்வருக்கு தொழிற்சங்கத்தினா் கடிதம்!

மூடப்படும் மதுக் கடை ஊழியா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரிக்கை

மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகள்: பணியாளா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரிக்கை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



