தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூா் பகுதியில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை சமூகநீதி துறை அமைச்சா் வன்னிஅரசு திங்கள்கிழமை நேரில் ஆறுதல் கூறினாா்.
நெட்டூா் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற தாக்குதலில் அரிவாளால் வெட்டப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராம்குமாா், ராயப்பன், மாா்க் ரமேஷ், அருள்மாறன் ஆகியோரை அமைச்சா் வன்னிஅரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
மேலும், ஆதிதிராவிட நலத்துறை மூலம் தீருதுதவி முதல் தவணை தொகையாக ராம் குமாருக்கு ரூ.1.30 லட்சத்திற்கான காசோலையை அமைச்சா் வழங்கினாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அனிதா, திருநெல்வேலி கோட்டாட்சியா் பிரியா, பாளையங்கோட்டை வட்டாட்சியா் மாரிராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமைச்சா்

விபத்தில் மாணவா்கள் உயிரிழப்பு: பெற்றோருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்







