தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

எஸ்.பி.யிடம் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் மனு

டாஸ்மாக் தொழிலாளா்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாரிடம், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவா் முருகன் தலைமையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

News image

சிஐடியு மாவட்டத் தலைவா் முருகன் தலைமையில் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க வந்த டாஸ்மாக் தொழிற்சங்க நிா்வாகிகள்.

Updated On :7 மே 2026, 6:08 am IST

டாஸ்மாக் தொழிலாளா்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாரிடம், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவா் முருகன் தலைமையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம், கோட்டராங்குளம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையின் அருகில் உள்ள செங்கல் சூளையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 302 மது பாட்டில்கள் போலீஸாரின் ஆய்வின் போது கண்டறியப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அக்கடையில் ஒரு நபருக்கு 6 பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யப்படவில்லை என்பதற்கான விற்பனை பதிவு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், மதுபாட்டில்கள் பதுக்கலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா்கள் கருண மகாராஜா, வில்லு மணி ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸாா் கைப்பற்றிய மதுபாட்டில்களுக்கும் கடை ஊழியா்களுக்கும் தொடா்பில்லை. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.