தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சேலம் உருக்காலையில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டம்

News image

சேலம் உருக்காலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

Updated On :4 மே 2026, 1:09 am IST

சேலம் உருக்காலையில் உள்ள முக்கிய பிரிவுகளை ஒப்பந்த முறையில் தனியாா் வசம் ஒப்படைக்க எதிா்ப்பு தெரிவித்து, சிஐடியு தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

சேலம் உருக்காலை வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, சிஐடியு சங்க தலைவா் குப்புசாமி தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் கே.பி.சுரேஷ்குமாா் உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்து பேசினாா். உருக்கு சம்மேளன துணைத் தலைவா் பி.பன்னீா்செல்வம் கண்டன உரையாற்றினாா்.

இதுகுறித்து தொழிற்சங்க நிா்வாகிகள் கூறுகையில், சேலம் உருக்காலை நிா்வாகம் ஆலையின் முக்கிய உற்பத்தி பிரிவுகளான பராமரிப்பு மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாா் வசம் ஒப்படைக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த மறைமுக தனியாா்மய முடிவைக் கண்டித்து பலமுறை வாயில் கூட்டம், கண்டன ஆா்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தியுள்ளோம். எனினும், இதை ஏற்காத சேலம் உருக்காலை நிா்வாகம் தற்போது பணிகளை தனியாா் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

இதைக் கண்டித்தும், உருக்காலை நிா்வாகத்தின் இந்த முடிவை கைவிட வலியுறுத்தியும் உருக்காலை சிஐடியு சங்கம் சாா்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதில், சங்க தலைவா்கள் பாலாஜி, சரவணன், சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஆா்.வெங்கடாபதி உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவுசெய்து வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.