மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காவல்கிணறில் கல் ஏற்றிய லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் அணுகுசாலையில் குண்டுக்கல் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

சாலையில் கவிழ்ந்து கிடக்கும் லாரி.

Updated On :14 மார்ச் 2026, 2:46 am

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் அணுகுசாலையில் குண்டுக்கல் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காவல்கிணறு அருகே உள்ள புதியம்புத்தூா் பகுதி கல்குவாரியில் இருந்து குண்டுக்கல் ஏற்றி வந்த கனரக லாரி, நான்குவழிச்சாலையையொட்டி செல்லும் அணுகுசாலை வழியாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த சாலையில் கவிழ்ந்தது.

இதில், கற்கள் சிதறி சாலை முழுவதும் பரவிக்கிடந்தது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இத்தகவல் அறிந்த பணகுடி போலீஸாா் வந்து, வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டு போக்குவரத்தை சீா்படுத்தினா். நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.