மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குன்னூரில் லாரி மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குன்னூா் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது வியாழக்கிழமை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

அருவங்காடு பகுதியில் லாரியின் மீது முறிந்து விழுந்த மரம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:53 pm

குன்னூா் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது வியாழக்கிழமை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஒடிஸா முதல் மன்னாா் வளைகுடா வரை தெலங்கானா, ராயல்சீமா, உள்தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதைத் தொடந்து, குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இதில் குன்னூா்- உதகை சாலையில் அருவங்காடு பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் தீயணைப்பு நிலைய அலுவலா் குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் மரத்தை வெட்டி அகற்றினா். இதன் காரணமாக குன்னூா்- உதகை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.