குன்னூா் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது வியாழக்கிழமை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஒடிஸா முதல் மன்னாா் வளைகுடா வரை தெலங்கானா, ராயல்சீமா, உள்தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதைத் தொடந்து, குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இதில் குன்னூா்- உதகை சாலையில் அருவங்காடு பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் தீயணைப்பு நிலைய அலுவலா் குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் மரத்தை வெட்டி அகற்றினா். இதன் காரணமாக குன்னூா்- உதகை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

காங்கயத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் மரம் சாய்ந்ததால் மின்தடை

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!

மரம் விழுந்து மின்கம்பங்கள் சேதம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


