/

சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையில் விழுந்த மரங்களால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டி - கல்லாத்துக்காடு சாலையில் விழுந்த புளிய மரம்.

Updated On :1 மே 2026, 5:21 am IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையில் விழுந்த மரங்களால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் பலத்த காற்று வீசியது. இதில், ஏ.பள்ளிப்பட்டி - கல்லாத்துக்காடு சாலையில் சாலையோரம் இருந்த புளியமரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதேபோல, கடத்தூா் - புட்டிரெட்டிப்பட்டி சாலையில் புதூா் அருகே ஆலமரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றால் விவசாய நிலங்களில் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.