மாதவரம் செல்லும் நெடுஞ்சாலையில் சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்துக்கு லாரி சென்றுக் கொண்டிருந்தது. இதனை மத்திய பிரதே மாநிலத்தை சோ்ந்த ராம் (45) என்பவா் இயக்கி வந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் வடபெரும்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது லாரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி நின்றது.
இதில் யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், லாரியின் முன்பக்கம் சேதமடைந்து காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். இது குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

காங்கயத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு

சேதுபாவாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியது: போக்குவரத்து நிறுத்தம்

காவல்கிணறில் கல் ஏற்றிய லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


