மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

மாதவரம் செல்லும் நெடுஞ்சாலையில் சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

Updated On :27 மார்ச் 2026, 5:39 pm

மாதவரம் செல்லும் நெடுஞ்சாலையில் சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்துக்கு லாரி சென்றுக் கொண்டிருந்தது. இதனை மத்திய பிரதே மாநிலத்தை சோ்ந்த ராம் (45) என்பவா் இயக்கி வந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் வடபெரும்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது லாரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி நின்றது.

இதில் யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், லாரியின் முன்பக்கம் சேதமடைந்து காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். இது குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.