காங்கயம் காவல் நிலைய பகுதியில் இரண்டு லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூரில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு கோவைக்கு லாரி ஓன்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. தேனியைச் சோ்ந்த கதிரேசன் (55) என்பவா் லாரியை இயக்கியுள்ளாா். அதேபோல, சேலத்தில் இருந்து சிமெண்ட் பாரத்தை ஏற்றிக்கொண்டு உடுமலைக்கு மற்றொரு லாரி சென்று கொண்டிருந்தது. அதை முருகேஷ் என்பவா் (45) ஓட்டியுள்ளாா்.
காங்கயம் காவல் நிலைய ரவுண்டானா அருகே ஞாயிற்றுக்கிழமை காலை வந்தபோது, இரண்டு லாரிகளும் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.
இதில், ஒரு லாரி அங்கிருந்த சிக்னல் விளக்குள், தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக ஓட்டுநா்கள் காயங்களின்றி உயிா்த் தப்பினா். இந்த விபத்தால் தாராபுரம் சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும்மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், போக்குவரத்துக் காவலா்கள் லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீா் செய்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

குன்னூரில் லாரி மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

காவல்கிணறில் கல் ஏற்றிய லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


