மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து

பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேரோட்ட விழாவில் தேர் கவிழ்ந்தது குறித்து...

News image

திருப்பாலைவனம் கிராமத்தில் நடைபெற்ற தோரோட்ட விழாவில் கவிழ்ந்து கிடக்கும் கிடக்கும் தேர்.

Updated On :29 மார்ச் 2026, 11:47 am

பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேரோட்ட விழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை ஸ்ரீ திருப்பாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவ விழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு செய்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்ற வந்தது.

பிரமோற்சவ விழாவின் 7-ம் நாள் தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அன்னை லோகாம்பிகாதேவி சமேதமாக திருப்பாலீஸ்வரர் எழுந்தருளி நகரின் முக்கிய மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

காலையில் தொடங்கி மாலை வரையில் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் மதியம் தேர் நிறுத்தப்பட்டது. பிற்பகல் மீண்டும் தேரோட்டம் தொடங்கியது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

தேர், திருப்பாலைவனம் காவல் நிலையத்தை கடந்து பொன்னேரி-பழவேற்காடு சாலைக்கு வரும் போது எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி சிலருக்கு காயம் ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேர் அருகே சிக்கி கொண்டவர்களை மீட்டனர். தீயணைப்புத் துறை வீரர்கள் லேசான காயமடைந்தவர்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேரோட்ட விழாவில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதன் காரணமாக திருப்பாலைவனம் கிராமத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Summary

The incident of a chariot overturning during the chariot procession at the Thiruppaleeswarar temple near Ponneri has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.