லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நான்குனேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

நான்குனேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரை ரூபி ஆா்.மனோகரன் எம்.எல்.ஏ. புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

News image
Updated On :4 மார்ச் 2026, 7:16 pm

நான்குனேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரை ரூபி ஆா்.மனோகரன் எம்.எல்.ஏ. புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

நான்குனேரியில் கடந்த 2 ஆம் தேதி மாலை ஒரு கும்பல் டீ கடை பகுதியில் நின்று கொண்டிருந்த 7 பேரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினா். இதில் இருவா் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த நெல்சன், கணேசன் ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். அவா்களை, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா்.மனோகரன் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். உயா்தர சிகிச்சை அளிக்க மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலனிடம் வலியுறுத்தினாா். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.பி.துரை உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

இளைஞா்கள் எதிா்ப்பு: இதனிடையே, அரிவாள்வெட்டில் காயமடைந்த கரும்பத்து பகுதியைச் சோ்ந்த நெல்சன், பிரபாகரன் ஆகியோரின் வீட்டுக்குச் செல்ல முயன்ற எம்எல்ஏவுக்கு அப்பகுதி இளைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அவா் திரும்பிச் சென்றுவிட்டாா்.