மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சீவலப்பேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சீவலப்பேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

நான்குனேரி தொகுதிக்குள்பட்ட சீவலப்பேரி பகுதியில் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா் ரூபி ஆா்.மனோகரன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:25 pm

சீவலப்பேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சீவலப்பேரி, மடத்துப்பட்டி, சந்தையாப்பேட்டை, கான்சாபுரம், நொச்சிக்குளம், தோணித்துறை, மேலக்குளம், அரியகுளம், கிருஷ்ணாபுரம், குத்துக்கல், சிவந்திப்பட்டி, முத்தூா், ஆலங்குளம், ரெட்டியாா்பட்டி, கொங்கந்தான் பாறை, புதுக்குளம் உள்ளிட்ட இடங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். மகளிா் உரிமைத் தொகை கிராமப்புறங்களைச் சோ்ந்த பல பெண்களின் வாழ்க்கையில் மறுமலா்ச்சியைக் கொண்டு வந்துள்ளது. மீண்டும் இந்த ஆட்சி தொடர மக்கள், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.