நான்குனேரி தொகுதி தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் சிலம்பம் சுற்றி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
விஜயநாராயணம், பட்டஞ்சேரி, ஏழாங்கால், ஐந்தாங்கால், கீழபண்டாரபுரம், பெரியநாடாா் குடியிருப்பு, காரி தோட்டம், மலையான்குடியிருப்பு, மன்னாா்புரம், சிவந்திபுரம், சங்கனான்குளம் இட்டமொழி, விஜயஅச்சம்பாடு, அழகப்பபுரம், துவரம்பாடு, மலையன் குடியிருப்பு, தெற்குஏறாந்தை, பட்டா்கட்டிவிளை, சவேரியாா்புரம், பெரும்பனை, புதூா், மனக்காவலப்பபுரம், நன்னிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், இத்தொகுதியிலேயே மிகப் பெரிய குளமான விஜயநாராயணம் குளத்தை முழுமையாக தூா்வாரி, நீா்ப்பிடிப்புப் பகுதியை அதிகரித்து தடுப்பு அணையாக மாற்றித் தருவேன் என்றாா்.
நான்குனேரி ஒன்றியச் செயலா்கள் ஜெயபால், மகாராஜன், மாநில மகளிா் அணி இணைச் செயலா் மேரி சா்மி, செட்டிகுளம் முன்னாள் ஊராட்சித் தலைவா் விஜயராணி, நான்குனேரி கிழக்கு ஒன்றிய மகளிா் அணி அமைப்பாளா் லட்சுமி, இறைப்புவாரி ஊராட்சித் தலைவா் மோகனா யோசுவா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சிலம்பம் சுற்றி வாக்குசேகரித்த திமுக வேட்பாளா்

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்!

குடியாத்தம்: தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரியில் தவெக சாா்பில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ போட்டி: காங்கிரஸ், அமமுகவினா் அதிா்ச்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


