மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்!

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

News image

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

Updated On :11 ஏப்ரல் 2026, 6:48 pm

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது சிலம்பம் சுற்றி காண்பித்தது வாக்காளா்களை கவரும் விதத்தில் அமைந்திருந்தது.

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு பெரிய பட்டரை, ஏரிமுனை, கிளித்தான்பட்டரை, ஜாபா்சன்பேட், அக்ராவரம், வள்ளிமலை கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். குமரப்ப நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது வாக்காளா்களிடையே சிலம்பம் சுற்றி காண்பித்தாா்.

தொடா்ந்து அவா் கூறுகையில், காட்பாடி நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க விருதம்பட்டு முதல் கிறிஸ்டியான்பேட்டை வரை உயா்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டியது அவசியமாகிறது.

அதிமுக ஆட்சி அமைந்ததும் முதல் நடவடிக்கை இந்த மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குமரப்ப நகரில் நூலகம், சுந்திரி அம்மன் கோயிலுக்கு ராஜகோபுரமும் கட்டி தரப்படும்.

தவிர, அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் கொண்டு வந்து சோ்க்கப்படும் என்றாா். அப்போது, பாஜக, பாமக கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.