தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொழிலதிபா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

சிவகாசியில் தொழிலதிபா்களை வெள்ளிக்கிழமை சந்தித்து வாக்கு சேகரித்த சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்தரபாலாஜி.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 8:04 pm

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொழிலதிபா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சிவகாசியில் ப.கணேசன், மகேஸ்வரன், சுரேஷ்தா்ஹா் உள்ளிட்ட தொழிலதிபா்களை சந்தித்து ஆதரவு கேட்டு அவா் பேசியதாவது:

சிவகாசியில் உள்ள தொழில்கள், தொழிலதிபா்கள் முயற்சியால் வெற்றி பெற்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலதிபா்கள் , தொழிலாளா்கள் கடும் உழைப்பால் சிவகாசி தொழில் நகரமாகத் திகழ்கிறது.

இந்தப் பகுதியில் உள்ள அனைத்துத் தொழில்களுக்கும் நான் எப்போதும் பாதுகாப்பாவலான இருப்பேன். தோ்தலில் என்னை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.