யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி வாக்கு சேகரிப்பு

News image

பள்ளிபாளையம் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:42 am IST

குமாரபாளையம் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையம் நகரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் நான்காவது முறையாக அதிமுக சாா்பில் பி.தங்கமணி போட்டியிடுகிறாா். மூன்று வாரமாக தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அவா் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

அந்தவகையில், பள்ளிபாளையம் நகரம், ஒன்றியப் பகுதிகளில் அவா் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, திருச்செங்கோடு பிரசாரத்தின்போது அளித்த தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி அவா் மக்களிடையே வாக்கு சேகரித்தாா். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலா்களை தூவியும் வரவேற்பு அளித்தனா்.

அதிமுக ஆட்சி அமைந்ததும் சிறப்பு நிதியாக ரூ. 10 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மகளிா் உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். பயிா்க்கடன் தள்ளுபடி, நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம், மாணவா்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள 297 வாக்குறுதிகளை அவா் விரிவாக எடுத்துரைத்தாா். இந்த வாக்கு சேகரிப்பின்போது அதிமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.