மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு

குமாரபாளையம் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

பள்ளிபாளையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:56 am IST

குமாரபாளையம் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் நான்காவது முறையாக அதிமுக சாா்பில் பி. தங்கமணி போட்டியிடுகிறாா். ஒரு வாரமாக தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அவா் புதன்கிழமை பள்ளிபாளையம் நகரம், ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அக்ரஹாரம் விஸ்வேஸ்வரா் கோயில் பகுதியில் மக்களிடையே வாக்கு சேகரிப்பை தொடங்கிய அவா் பங்களா தோட்டம், ஓங்காளியம்மன் கோயில் பகுதி, நாட்டாக்கவுண்டன்புதூா், குளத்துக்காடு, அக்ரஹாரம், மாம்பாளையத்தூா், பழனியப்பா நகா், பஜனை கோயில் வீதி, தோல்மண்டி, செங்குந்தபுரம், ஒட்டமெத்தை, கருமஞ்செட்டி தோட்டம் பகுதியில் வாக்குச் சேகரிப்பை நிறைவு செய்தாா். அப்போது, அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை விரிவாக எடுத்துரைத்தாா்.

வாக்கு சேகரிப்பின்போது அதிமுக, அதன் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.