கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பள்ளிபாளையம் நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பி.தங்கமணி தெரிவித்தாா்.
குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். வாக்கு சேகரிப்பின்போது அவா் பேசியதாவது:
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு விட்டது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டம், ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படும். அதிமுகவின் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் ரத்து செய்யப்படும். மேலும், வங்கிகளில் பெற்ற கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பொங்கல் தொகுப்புடன் ரூ. 1,000, ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், புதிய ஆட்டோ வாங்க ரூ. 75,000 மானியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றாா்.
இந்த பிரசாரத்தின் போது, அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

நம்பியூா் பகுதிக்கு புதிய கூட்டுகுடிநீா் திட்டம் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


