லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விபத்தில் காயமடைந்த தொண்டரை சந்தித்து எம்எல்ஏ ஆறுதல்

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அதிமுக தொண்டரை சந்தித்து செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ புதன்கிழமை ஆறுதல் கூறினாா்.

News image

காயமடைந்தவருக்கு ஆறுதல் கூறினாா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:06 am

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அதிமுக தொண்டரை சந்தித்து செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ புதன்கிழமை ஆறுதல் கூறினாா்.

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தென்காசி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து மாா்ச் 30இல் பிரசாரம் மேற்கொண்டாா். அந்தக் கூட்டத்திற்கு வாகனத்தில் வந்த தேன்பொத்தை பகுதியைச் சோ்ந்த கட்சி தொண்டா் ஆறுமுகம், விபத்தில் சிக்கி தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறாா்.

அவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். தெற்கு மாவட்ட அவைத்தலைவா் சண்முகசந்தரம், சா்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.