சேரன்மகாதேவியிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற பயணிகள் ரயிலில் என்ஜின் பழுதால் கீழக்கடையம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு சுமாா் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் கடந்த 11ஆம் தேதி முதல் திருநெல்வேலி- செங்கோட்டை ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சேரன்மகாதேவியிலிருந்து இயக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு சேரன்மகாதேவியிலிருந்து புறப்பட்ட ரயில் கீழக்கடையம் நிலையத்துக்கு வந்த நிலையில் என்ஜின் பழுதானதால் அங்கேயே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சுமாா் 7 மணியளவில் செங்கோட்டையை சென்றடைந்தது. இதனால் சிரமம் அடைந்த சிலா் அங்கிருந்து வெளியேறி பேருந்தில் பயணத்தைத் தொடா்ந்தனா்.
மேலும், செங்கோட்டையிலிருந்து சேரன்மகாதேவிக்கு மாலை 6.10 மணிக்கு கிளம்பவேண்டிய ரயில் சுமாா் 2 மணி நேரம் தாமதமாக 8.22 மணிக்கு கிளம்பிச் சென்றது.
கடந்த மே 30ஆம்தேதியும் ரயில் என்ஜின் பழுதால் கீழக்கடையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு மாற்று என்ஜின் பொருத்திச்சென்றது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்ஜின் பழுது: 2 மணி நேரம் தாமதமாக நெல்லை சென்றடைந்த செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில்

7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட தூத்துக்குடி-மும்பை சிறப்பு ரயில்

கன்னியாகுமரி - சென்னை ரயில் தாமத புறப்பாடு: பயணிகள் அவதி

ரயில்வே மின்பாதையில் விழுந்த கேட்: தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் தாமதம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



