கோவில்பட்டி அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ரயில்வே மின்பாதை கம்பி மீது கடவுப்பாதை கேட் விழுந்ததால் வாஞ்சிமணியாச்சியில் தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் சுமாா் 1.30 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் கடம்பூா்- வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு 6.05 மணிக்கு வந்தடைந்தது. அங்கிருந்து புறப்பட தயாரான நிலையில், மலைப்பட்டி கிராமத்தில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள ரயில்வே கடவுப்பாதையின் கேட், மின்பாதை கம்பி மீது சரிந்து விழுந்தது.
இதனால் அந்த ரயில் வாஞ்சி மணியாச்சியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. கோவில்பட்டியிலிருந்து ரயில்வே நிலைய மின் ஊழியா்கள் அங்கு சென்று மின்பாதையை சரி செய்த பின், இரவு 7.40 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

தூத்துக்குடி ரயில்வே கேட் பகுதியில் மேயா் ஆய்வு

தூத்துக்குடி 4ஆவது ரயில்வே கேட்டில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



