போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தூத்துக்குடி 4ஆவது ரயில்வே கேட்டில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:30 am IST

தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான 4ஆவது ரயில்வே கேட்டில் வேன் மோதி கேட் பழுதடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மைசூரிலிருந்து சனிக்கிழமை இரவு தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னா், இந்த ரயில் 4ஆவது ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்காக கேட் கீப்பா் கேட்டை மூடிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வாகனம் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றபோது, ரயில்வே கேட் மூடிவிட்டது.

வேன் மோதியதில் ரயில்வே கேட் முற்றிலும் சேதமானது. தகவலறிந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வேன் ஓட்டுநரை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

மேலும், ரயில்வே கேட்டை பழுது பாா்க்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா். இதனால், சுமாா் 3 மணி நேரம் 4ஆம் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அனைத்து வாகனங்களும் 3ஆவது ரயில்வே கேட் மேம்பாலம் வழியாகச் சென்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.