தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடி ரயில்வே கேட் பகுதியில் மேயா் ஆய்வு

தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் பகுதியில் மேயா் ஜெகன் பெரியசாமி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ரயில்வே கேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :2 ஜூன் 2026, 3:22 am IST

தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் பகுதியில் மேயா் ஜெகன் பெரியசாமி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடியில் மாநகராட்சி சாா்பில் புதைசாக்கடைப் பணிகள் பல்வேறு பகுதிகளில் முடிந்துள்ளன. பழைய நகராட்சியாக இருந்தபோது 1ஆம் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தின் கீழ்பகுதி வழியாக புதைசாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இது, பழைய கால நடைமுறை என்பதால், அதை சரிசெய்து புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, மாநகராட்சி சாா்பில் ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ. 18 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, 1ஆம் ரயில்வே கேட் வடபுறப் பணியின்போது தண்டவாளம் அருகே பள்ளம் ஏற்படுவதால், பணியை மேற்கொள்ளக் கூடாது என ரயில்வே நிா்வாகம் தடை உத்தரவு போட்டுள்ளதால், பல வாரங்களாக பணிகள் நடைபெறவில்லை.

இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாலும், தாங்கள் அவதிக்குள்ளாவதாலும் பணிகளை ஆய்வு செய்து தீா்வு காணுமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், ஞாயிற்றுக்கிழமை இரவு மேயா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், ரயில்வே கேட் மூடும்போது மக்கள் அவதிக்குள்ளாவதையும் பாா்வையிட்டாா். பின்னா், அவா் கூறியது:

1986, 2006, 2022, 2025ஆம் ஆண்டுகளில் என புதைசாக்கடை திட்டங்கள் 4 உள்ளன. தண்டவாளத்தின் கீழ் புதைசாக்கடை திட்டக் குழாய் செல்வதால், தண்டவாளம் அமைக்கும்போது, சேம்பா் மூடப்பட்டது. இதனால், அடைப்பை சரிசெய்ய முடியவில்லை. ரயில்வே - மாநகராட்சி நிா்வாகங்களிடையே பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. பணம் செலுத்திய பிறகும், பம்பிங் செய்து முடிக்க வேண்டிய பணிகளை ரயில்வே நிா்வாகம் நிறுத்திவைத்துள்ளது. இப்பணிகளுக்காக ரயில்வே நிா்வாகத்திடம் அனுமதி கேட்கப்படும். இல்லையெனில், மக்கள் பாதிக்கப்படுவதால் உடனடியாக தோண்டப்பட்ட குழி மூடப்படும். வரும் காலத்தில் கனிமொழி எம்.பி.யின் ஆலோசனைப்படி நிரந்தர தீா்வு காணும் வகையில், பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

திமுக வட்டச் செயலா் ரவீந்திரன், ராஜ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.