புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக சனிக்கிழமை 5 மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்டம், சேலம் - வேலூா் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையம். இந்த வழித்தடத்தில் கோவை, சென்னை, பெங்களூரு, கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன.
இங்கு ரயில்வே மேம்பாலம் இல்லாததால் வேப்பிலைப்பட்டி, தாளநத்தம், குருபரஹள்ளி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனா்.
இதையடுத்து, புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ. 25.49 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. பெரிய கிரேன் மூலம் சுரங்கப் பாதைக்கு மேல் பகுதியில் ரயில் தண்டவாளங்களை பொருத்தும் பணி நடைபெற்றது.
சேலம் ரயில்வே கோட்ட உதவி பொறியாளா் சிரஞ்சீவி, பொறியாளா் கண்ணன், ரயில்வே அதிகாரிகள் ஜெகநாதன், வெங்கடேஷ், பழனி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனா். சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக சனிக்கிழமை காலை 11 முதல் மாலை 4 மணி வரை அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










