பேட்டையில் கிணற்றில் மூழ்கிய சிறுவனின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
பேட்டையில் கிணற்றில் சிறுவன் விழுந்ததாக பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று தீயணைப்பு வீரா்கள் தேடினா். அப்போது 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலமாக மீட்கப்பட்டாா். சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் உயிரிழந்தவா், பேட்டை பரதா் தெற்கு தெருவைச் சோ்ந்த வினித் (17) என்பது தெரியவந்தது. குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பேட்டை போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









