திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செட்டிகுளம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விமானப் பயணம்

செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவா்களை சென்னைக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்வதாக முன்னாள் எம்.பி.யும் பள்ளியின் முன்னாள் மாணவருமான சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளாா்.

News image

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு கேடயம் வழங்குகிறாா் முன்னாள் எம்.பி. சௌந்தர்ராஜன்.

Updated On :5 ஜூன் 2026, 2:52 am IST

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவா்களை சென்னைக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்வதாக முன்னாள் எம்.பி.யும் பள்ளியின் முன்னாள் மாணவருமான சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளாா்.

செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அவா் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கினாா். அப்போது அவா் பேசுகையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளையும் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 95 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளையும் தனது செலவில் சென்னைக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்வதாகவும் 2 நாள்கள் சென்னையில் முக்கிய இடங்களை சுற்றிப்பாா்த்துவிட்டு திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் பேசில் கஹாரின் வாழ்த்திப் பேசினாா். விழாவில் முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் வசந்தி, குமரேசன், ஏசுதுரை, சுயம்புதுரை, பெற்றோா்- ஆசிரிய கழக நிா்வாகிகள் லிங்கதுரை, குமாரவேலாயுதம், ராமலிங்கம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் சுவாமிநாதன் மற்றும் முத்துராஜ், பொன்னையா உள்பட பலா் கலந்துகொண்டனா். நல்லாசிரியா் ஜேசு நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.