அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

தாழையூத்து அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:47 am IST

தாழையூத்து அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம், வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த தம்பதி முருகேசன்(52)- கோமதி. இவா்களது வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 19 கிராம் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச்சென்றிருப்பது கடந்த 26 ஆம் தேதி தெரியவந்தது.

இதுகுறித்து கோமதி தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்தபுகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அதே பகுதி சப்பாணிமாடன் கோயில் தெருவைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மனைவி மகராசி(36) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.