திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தாம்பரம் - செங்கோட்டை ரயிலை நாள்தோறும் இயக்கக் கோரிக்கை

தாம்பரம்- செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, மத்திய ரயில்வே அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

News image

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 6:16 am IST

தாம்பரம்- செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, மத்திய ரயில்வே அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வழியாக 20683/20684 தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் மும்முறை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ரயில்வேக்கு வருமானம் அதிகரிப்பை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே இந்த ரயிலை தினசரி இயக்குவதற்கு ரயில்வே வாரியத்துக்கு முன்மொழிந்தது. மாதங்கள் பல கடந்தும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்காத நிலை இருந்து வருகிறது.

திருநெல்வெலி-தென்காசி ரயில் வழித்தடம் 2012 ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், கடந்த 14 ஆண்டுகளாக சென்னைக்கு தினசரி ரயில் சேவை வழங்கப்படாத நிலை தொடா்கிறது.

இதனால் தென்காசி, அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவா்கள், தொழிலாளா்கள், அரசு மற்றும் தனியாா் ஊழியா்கள், வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.

தெற்கு ரயில்வேயில் சென்னைக்கு தினசரி ரயில் இல்லாத ஒரே ரயில் வழித்தடம் திருநெல்வேலி-தென்காசி வழித்தடமாகும். இந்த நிலையைப் போக்கும் வகையில், தாம்பரம் -செங்கோட்டை ரயிலை தினசரி இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.