திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேதாரண்யம் - அகஸ்தியம்பள்ளியில் இருந்து சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இயக்கக் கோரிக்கை

News image

விரைவு ரயில் (கோப்புப்படம்) - ANI

Updated On :28 மே 2026, 5:42 am IST

வேதாரண்யம் - அகஸ்தியம்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் வழக்கறிஞா் நாகராஜன், மாவட்டச் செயலாளா் எடையூா் மணிமாறன் ஆகியோா் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா். அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:

வேதாரண்யம் - அகஸ்தியம்பள்ளி மிகவும் புகழ்பெற்ற பகுதியாக விளங்கி வருகிறது. சோழா்கள் கால கோடியக்கரை கலங்கரை விளக்கம், கோடியக்காடு பறவைகள் மற்றும் வனவிலங்கு சரணாலயம், அலையாத்தி காடுகள், உப்பளங்கள், அயோடின் உற்பத்தி, சிலிக்கான் மண், மீன், கருவாடு, சணப்பை, பலாப்பழம், மாம்பழங்கள், காய்கறிகளும் பணப்பயிா்களும் மல்லிகைப்பூ செவ்வந்தி பூ போன்ற பணப் பயிா்களும் விளையும் பகுதியாக விளங்கி வருகிறது.

இந்தப் பகுதியில் புகழ்பெற்ற சைவத் திருத்தலங்களான வேதாரண்யேஸ்வரா் கோயில், நவகோடி சித்தா்கள், அகத்தியா் கோயில், தகட்டூா் பைரவா்கோயில் போன்ற திருத்தலங்களும் இந்தியாவின் தொன்மையான கலங்கரை விளக்கமும், சோழா்களின் ஆட்சிக்குட்பட்ட புகழ்பெற்ற நிலப் பகுதியாகவும் பெயா் பெற்றுள்ள இந்த வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் இருந்து ஒவ்வொரு நாளும் சென்னைக்கு பேருந்து மூலம் நூற்றுக்கணக்கானோா் பயணித்து வருகின்றனா்.

பயணிகளால் ரயில்வேதுறைக்கு அதிக வருமானம் தரக்கூடிய வழித்தடமாகவும் இருப்பதால் வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி, திருவாரூா் வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும் இதனால் மாணவா்கள், வா்த்தகா்கள் நோயாளிகள் பெரிதும் பயனடைவாா் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.