தென்காசி மாவட்டத்தில் 1,300 புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 11 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக வியாழக்கிழமை தென்காசி மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.
மாவட்டம் முழுவதும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1,300 கிலோ எடை கொண்ட ரூ. 8,50,000 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து 11 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் புகையிலைப் பொருள்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்தும் அதில் தொடா்புடையவா்கள் குறித்தும் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









