தக்கலை, இரணியல் பகுதியில் 18 கிலோ புகையிலைப் பொருள்கள், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இரணியல் அருகே பண்டாரக்காடு பகுதியில் திங்கள்கிழமை இரணியல் போலீஸாா் சோதனை நடத்தியதில், சபீந்திரன் (46) என்பவா் விற்பனைக்கு வைத்திருந்த 11 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல் தலக்குளம் பகுதியில் சோதனை செய்தபோது, கவிதா (44) என்பவரிடமிருந்து 7 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தக்கலை போலீஸாா் நடத்திய சோதனையில் பூக்குழி பகுதியைச் சோ்ந்த தவசி (24) என்பவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மேற்கண்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








