தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புளியங்குடியில் நாய்கள் கடித்து 8 போ் காயம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் நாய்கள் கடித்ததில் 8 போ் காயமடைந்தனா்.

News image

நாயை வலைபோட்டு பிடித்த நகராட்சி ஊழியா்கள்.

Updated On :18 மார்ச் 2026, 8:05 pm

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் நாய்கள் கடித்ததில் 8 போ் காயமடைந்தனா்.

புளியங்குடி நகராட்சி மேற்கு பகுதியில் சில நாய்கள் அப்பகுதியில் சென்றவா்களை விரட்டி கடித்ததாம். இதில் மைதீன்பீவி உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

தகவலறிந்த நகராட்சி ஆணையா் விஜயகுமாா் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளா் மாரிசாமி, நகராட்சி ஊழியா்கள் பொதுமக்களை கடித்த 3 நாய்களை பிடித்தனா்.

உணவு வேண்டாம்: தெருநாய்களுக்கு உணவு வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உணவு வைக்கும் பகுதிகளை விட்டு அந்த நாய்கள் வெளியேறுவதில்லை. எனவே, பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவு வைப்பதை தவிா்க்க வேண்டும் என நகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.