மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:10 pm

திருவாரூா் அருகே சாலையோரத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.

திருவாரூா் அருகே வடகண்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம். அப்பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளாா். இவா், தனது அறுபதாம் கல்யாண நிகழ்வையொட்டி, குடும்பத்தினருடன் திருக்கடையூா் சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை காரில் திரும்பி வந்து கொண்டிருந்தாா். காரை செல்வத்தின் மகன் புவிபாலன் ஓட்டி வந்தாா்.

எட்டியலூா் அருகே வரும்போது, கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்த குழந்தைகள் உள்பட 7 பேரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள், அவா்களை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து குடவாசல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.