மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:26 pm

பழனியருகே சாலையோர தடுப்பில் காா் மோதியதில் வெண்ணெய் வியாபாரி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் அங்குராஜ் (48). வெண்ணெய் வியாபாரம் செய்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவியுடன் காரில் கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்தாா்.

பழனியை அடுத்த மானூா் புறவழிச் சாலையில் காா் சென்றுகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கம் இருந்த பாலத்தின் கரையில் மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.

இதில் காரின் முன்பகுதியில் அமா்ந்திருந்த அங்குராஜ் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. அவரது மனைவியும், காா் ஓட்டுநரும் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.