மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:21 pm

தருமபுரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

பாலக்கோடு வட்டம், குஜ்ஜார அள்ளி அருகே எம். செட்டிஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் மகன் அருள்காந்தன் (23), ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை சொந்த வேலை காரணமாக ஆல்மாரப்பட்டி சென்றுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திருப்பிக் கொண்டிருந்தாா்.

ராயக்கோட்டை- மாரண்டஅள்ளி சாலையில் பாளையங்கோட்டை அருகே நிலைதடுமாறி சாலையோரம் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அருள்காந்தனை அக்கம்பக்கத்தினா் மீட்டு மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அருள்காந்தன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.