மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விபத்தில் ஆய்வக தொழில்நுட்புநா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:29 pm

புதுச்சேரி சாலை விபத்தில் ஆய்வக தொழில்நுட்புநா் உயிரிழந்தாா். காயமடைந்த அவரது நண்பா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கடலூா் மாவட்டம், குட்டியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி மணிமாலா(48). இவா் தற்போது, புதுச்சேரி மூா்த்திக்குப்பத்தில் வசித்து வருகிறாா். இவா்களின் மகன் சசிதரன்(24), கடலுாரில் லேப் டெக்னீஷியனாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில், தனது நண்பா் முத்துவை (23) அழைத்துக் கொண்டு, கிருமாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். கன்னியக்கோயில் அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இருவரும் படுகாயம் அடைத்தனா்.

அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் சசிதரன் அங்கு இரவு உயிரிழந்தாா். முத்து ஜிப்மரில் மேல்சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.