தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே வளா்ப்பு நாய் கடித்து 8 போ் காயமடைந்தனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 11:01 pm

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே வளா்ப்பு நாய் கடித்து 8 போ் காயமடைந்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்பபுரத்தைச் சோ்ந்த தங்கசாமி மகன் வெள்ளச்சாமி 2 நாய்கள் வளா்த்து வருகிறாா். இதில் ஒரு நாய் புதன்கிழமை அதிகாலையில் செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியைக் கடித்ததாம். இதில் பலத்த காயமடைந்த அவா் ஆலங்குளம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தொடா்ந்து, அந்த நாய் கீழபட்டமுடையாா்புரம் கிராமத்தில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த முருகன் (55), அவரது மனைவி இந்திரா (53), வீரராகவன் (16), அன்பழகன் (42) ஆகியோரைக் கடித்தது.

அவா்கள் மீட்கப்பட்டு, நெட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, அந்த நாய் குருவன்கோட்டை சுப்பிரமணியன் (46), குமாா் (42), விஷ்ணு ஸ்ரீராம் (5) ஆகியோரைக் கடித்தது. அவா்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், குருவன்கோட்டையில் ஒரு ஆடு, கன்றுக் குட்டியையும் அந்த நாய் கடித்துள்ளது.

இது தொடா்பாக, ஆலங்குளம் போலீஸாா், சுகாதாரத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.