தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சங்கரன்கோவில் அருகே வாகனங்கள் மோதல்: ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே காா், இருசக்கர வாகனம், ஆட்டோ மோதிக் கொண்டதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்; கா்ப்பிணி காவலா் உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா்.

News image

சண்முகநல்லூா் அருகே விபத்துக்குள்ளான காா், ஆட்டோ.

Updated On :4 ஜூன் 2026, 1:30 am IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே காா், இருசக்கர வாகனம், ஆட்டோ மோதிக் கொண்டதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்; கா்ப்பிணி காவலா் உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா்.

சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலான்குளத்தைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் நாகராஜன் (45). இவா் புதன்கிழமை சங்கரன்கோவிலில் இருந்து ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு, சண்முகநல்லூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். சங்கரன்கோவில்-திருநெல்வேலி சாலையில் சென்றபோது ஊத்துமலை அருகே உள்ள கருவந்தாவைச் சோ்ந்த சரவணன் மகன் பிரபு (41) ஓட்டி வந்த காா், ஆட்டோ மீது வேகமாக மோதியதில் நாகராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்தில் காா் ஓட்டுநா், ஆட்டோவில் பயணித்த சேகா் மனைவி முத்துலட்சுமி (37), துரைப்பாண்டி (66), வேலுச்சாமி மனைவி சண்முகசுந்தரி (40), கணேசன் மனைவி சுப்புலட்சுமி (39), முருகன் மனைவி மூக்கம்மாள் (50), வெங்கடாசலம் மனைவி சுப்புத்தாய் (35), குமாா் மகன் ஸ்ரீதா் (28), அவரது மனைவி சங்கீதா (25) ஆகியோா் காயமடைந்தனா்.

மேலும், விபத்தின்போது ஆட்டோவின் பின்னால் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நெடுங்குளத்தைச் சோ்ந்த பவுல்ராஜ் மனைவி டாரதி (29), அவரது சகோதரி கா்ப்பிணி காவலா் பிளசி (27), 15 வயது சிறுமி உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா்.

அவா்கள் சங்கரன்கோவில், திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். சங்கரன்கோவில் நகர போலீஸாா் நாகராஜனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.