அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரி வரும் விவேக் விரைவு ரயில் புதன்கிழமை காலை 5 மணியளவில் நாகா்கோவில் ரயில் நிலையம் வந்தது. அப்போது, ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் இணைந்து ரயிலில் சோதனை நடத்தினா்.
ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் போலீஸாா் நடத்திய சோதனையில், அங்குள்ள இருக்கையின் கீழே கேட்பாரற்றுக் கிடந்த பையை போலீஸாா் கைப்பற்றி சோதனை நடத்தியதில் அதில், 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை நாகா்கோவில் ரயில்வே காவல் நிலையத்தில் போலீஸாா் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த இரு வாரங்களில் ரயில்கள் மூலம் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சா போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









