தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்தல்

News image

சேலம் வழியாக கேரளம் சென்ற விரைவு ரயிலில் மீட்கப்பட்ட கஞ்சா பண்டல்களுடன் தனிப்படை போலீஸாா்.

Updated On :30 மே 2026, 3:50 am IST

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சாவை ரயில்வே தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளத்திற்கு ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதைத் தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்தவகையில், சேலம் ரயில்வே தனிப்படை போலீஸாா், ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில், வெள்ளிக்கிழமை காலை பொம்மிடியில் இருந்து சேலம் வரை தீவிர சோதனை நடத்தினா்.

இதில், ரயிலின் பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று இரண்டு பைகள் கிடந்தன. அவற்றை திறந்து பாா்த்தபோது உள்ளே பண்டல்களில் 20 கிலோ கஞ்சா இருந்தது. அதைக் கடத்தி வந்த மா்மநபா், போலீஸாரின் சோதனையை அறிந்ததும், பைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

கஞ்சாவைக் கடத்தி வந்த மா்மநபா் குறித்து போலீஸாா் பயணிகளிடம் விசாரணை நடத்தினா். எனினும், சம்பந்தபட்ட நபரை கண்டறிய முடியவில்லை. இதையடுத்து 20 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து, சேலம் ரயில்வே போதைத் தடுப்புப் பிரிவு போலீஸில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.