கொல்லங்கோடு அருகே உள்ள நடைக்காவு, ஊரம்பு பகுதிகளில் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, அடைக்காகுழி வட்டார மாா்க்சிஸ்ட் செயலா் டி.டி. ரெஜி, தமிழக முதல்வா் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்:
கொல்லங்கோடு காவல் சரகத்துக்குள்பட்ட நடைக்காவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையிலிருந்து சுமாா் 300 மீட்டா் தொலைவுக்குள் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் ஒரு கோயில், 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைந்துள்ளன.
ஊரம்பு பகுதி டாஸ்மாக் கடையிலிருந்து சுமாா் 400 மீட்டா் தொலைவுக்குள் ஒரு அரசு நடுநிலைப் பள்ளி, 4 கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைந்துள்ளன.
எனவே, நடைக்காவு மற்றும் சூழால் ஊராட்சிக்குள்பட்ட ஊரம்பு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமுருகன்பூண்டியில் மதுக் கடையை அகற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தா்னா

வெங்கடசமுத்திரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



