திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெங்கடசமுத்திரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வெங்கடசமுத்திரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

News image
Updated On :14 மே 2026, 4:19 am IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வெங்கடசமுத்திரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டச் செயலா் தி.வ.தனுஷன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி - பொம்மிடி நெடுஞ்சாலையில், வெங்கடசமுத்திரம் கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கிவந்தன. இந்த கடைகள் நெடுஞ்சாலை ஓரத்திலும், குடியிருப்புப் பகுதிகளிலும் இயங்கி வந்ததால், இப்பகுதியிலுள்ள மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனா்.

இந்நிலையில், தமிழக முழுவதும் 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் தமிழக முதல்வா் அறிவிப்பு வெளியிட்டாா். அதன்படி, வெங்கடசமுத்திரத்தில் இயங்கி வந்த இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளை மூடப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை பாராட்டி வரவேற்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.