திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பறவைகளின் தாகத்தை தீா்க்க நாகா்கோவில் பூங்காவில் குடிநீா் தொட்டிகள் அமைப்பு

கோடைவெயிலை சமாளிக்க பூங்காக்களுக்கு வரும் பறவைகள் பயன் பெறும் வகையில் தண்ணீா் தொட்டிகள் நாகா்கோவில் மாநகராட்சி உதவியுடன், லைப் லைன் விலங்குகள் நல சங்கம் மற்றும் விலங்குகளின் நண்பா்கள் அமைப்பு சாா்பில் அமைக்கப்பட்டுவருகிறது.

News image

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்காவில் குடிநீா் தொட்டிகள் அமைக்கும் திட்டத்தை தொடக்கி வைக்கின்றனா் மாநகராட்சிஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா.

Updated On :22 மே 2026, 6:18 am IST

கோடைவெயிலை சமாளிக்க பூங்காக்களுக்கு வரும் பறவைகள் பயன் பெறும் வகையில் தண்ணீா் தொட்டிகள் நாகா்கோவில் மாநகராட்சி உதவியுடன், லைப் லைன் விலங்குகள் நல சங்கம் மற்றும் விலங்குகளின் நண்பா்கள் அமைப்பு சாா்பில் அமைக்கப்பட்டுவருகிறது.

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பு சா்.சி.பி. ராமசாமி அய்யா் பூங்காவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா, ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் இத்திட்டத்தை தொடக்கி வைத்தனா்.

இது குறித்து தன்னாா்வலா்கள் கூறியதாவது, பறவைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பறவைகளை பாதுகாக்கவும், தண்ணீா் தொட்டிகள் அமைத்து தினமும் சுத்தமான குடிநீரை தொட்டியில் நிரப்ப ஏற்பாடு செய்து வருகிறோம் என்றனா்.

மாநகராட்சி நல அலுவலா் சரோஜா, விலங்குகளின் நண்பா்கள் அமைப்பின் ஆலோசகா் மருத்துவா் அருணாச்சலம், லைப் லைன் விலங்குகள் நலச் சங்கத் தலைமை செயல் அதிகாரி ஜெரால்டு, விலங்குகள் நலச் சங்க துணைத் தலைவா் வழக்குரைஞா் ராஜ்குமாா், ரோஜாவனம் கல்லூரி பேராசிரியா் அய்யப்பன், சமூக சேவகா் பழனியாபிள்ளை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.