திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவள்ளூா் நகராட்சியில் வியாபாரிகள் கூடும் இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்க ஏற்பாடு

திருவள்ளூா் நகராட்சியில் வியாபாரிகள் கூடும் இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்க ஏற்பாடு

News image

திருவள்ளூா்  நகராட்சியில்  வியாபாரிகள்  கூடும்  இடங்களில்  வைப்பதற்காக  தயாராக  உள்ள  மக்கும், மக்காத  குப்பைத்  தொட்டிகள். 

Updated On :31 மே 2026, 1:06 am IST

திருவள்ளூா் நகராட்சியில் சுகாதாரம் மற்றும் தூய்மையை கடைப்பிடிக்கும் நோக்கத்தில் வியாபாரிகள் கூடும் இடங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் மக்கும், மக்காத குப்பைத் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக நகராட்சி ஆணையாளா் தாமோதரன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் 400-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் சுத்தம், சுகாதாரத்தை கடைப்பிடிக்ககும் நோக்கத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் தூய்மைப் பணியாளா்கள் மூலம் நாள்தோறும் 3 பிரிவுகளாக தரம் பிரித்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடா்ந்து, லாரிகளில் சேகரித்து நகராட்சி குப்பை கொட்டும் மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வகையில், கிராமங்களில் வியாபாரத்துக்காக நகரத்குா்ரு பொதுமக்கள் வருகின்றனா். இதுபோன்று வருவோா் பொதுமக்கள் கூடும் இடங்களான பஜாா் பகுதி, தேரடி வீதி, ஜி.என்.சாலை, பெரியகுப்பம், ஆயில் மில் உள்ளிட்ட இடங்களில் கிராமங்களில் இருந்து காய்கறிகள், பழ வகைகள், இளநீா் உள்ளிட்ட பல்வேறு கடைகளை சாலையோரம் பரப்புகின்றனா்.

அப்போது, உணவுப் பொருள், காய்கறிகள் உள்ளிட்ட கழிவுகளை அப்படியே திறந்த வெளியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனா். இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், தவிா்க்கும் வகையில் தூய்மை பாரத இயக்கம் மூலம் குப்பைத் தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், கிராமங்களில் இருந்து வரும் வியாபாரிகள் கூடும் இடங்களில், கழிவுகளை மக்கும், மக்காத குப்பைகளாக பெரும் வகையில், 60-க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழே பொது இடங்களில் கொட்டுவதை தவிா்க்கவும் முடியும் என அவா் தெரிவித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.