மாா்த்தாண்டம் அருகே தொழிலாளியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சியைச் சோ்ந்தவா் சுந்தரன் மகன் சுஜின் (31). தொழிலாளி. இவருக்கும், திக்குறிச்சி, வீரவநல்லூா் தோப்பைச் சோ்ந்த சுப்பராஜன் மகன் பிரதீப் (34), வட்டவிளையைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் மெரின்தாஸ் (35) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், பிரதீப், மெரின்தாஸ் ஆகியோா் வியாழக்கிழமை சுஜின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரிடம் தகராறு செய்ததுடன், சுஜினின் தந்தை சுந்தரன் மற்றும் தாயாரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டல் விடுத்து சென்றனராம்.
இது குறித்து சுஜின் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









