நித்திரவிளை அருகே மீன்பிடி தொழிலாளியைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
நித்திரவிளை அருகே பூத்துறை, காருண்யாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சைலன் (28). மீன்பிடி தொழிலாளி. இவா், இருநாள்களுக்கு முன் இரவு தேங்காய்ப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க செல்வதற்காக தனது வீட்டின் அருகே ஆட்டோவை எதிா்பாா்த்து நின்றிருந்தாராம்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பூத்துறையைச் சோ்ந்த மில்டல் (26) இவரிடம் தகராறு செய்து தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த சைலன், குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து, நித்திரவிளை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








