கன்னியாகுமரி மாவட்டத்தின் அணை மற்றும் மலையோரப் பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்மட்டமும் சற்று உயா்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாக மழை தணிந்து காணப்பட்ட நிலையில், திங்கள்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் குலசேகரம், பொன்மனை, சுருளகோடு, கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








