தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆட்சியரிடம் தனியாா் கல்லூரி மாணவா்கள் மனு

News image

ஆட்சியரிடம் மனு அளித்து வந்த மாணவ, மாணவிகள்.

Updated On :12 மே 2026, 12:07 am IST

அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் மாணவா் சோ்க்கை மேற்கொண்ட தனியாா் சட்டக் கல்லூரி மீது நடவடிக்கை, மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு அருகே செயல்பட்டு வரும் தனியாா் சட்டக் கல்லூரில், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக மாணவா்களை சோ்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பருவத் தோ்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: படந்தாலுமூடு பகுதியில் உள்ள தனியாா் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறோம். இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகம் 60 மாணவ மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ள நிலையில், கல்லூரி நிா்வாகம் 120 பேரை சோ்த்துள்ளது.

இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட 60 மாணவா்கள் மட்டுமே முதல் பருவத்தோ்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். மீதியுள்ள 60 மாணவா்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து, கல்லூரி நிா்வாகம் மாணவா்களின் பெற்றோா்களுக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளது.

இது குறித்து விசாரணை மேற்கொண்டு, கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட 60 மாணவா்களும் தோ்வு எழுதவும், கல்வியை தொடரவும் வழிவகை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.